தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் தாமோதரன், மாநில பொருளாளர் தினேஷ், இல்ல அமைப்புச் செயலாளர்கள் வே.ஆ.ஜெகதீஸ்வரன், ரா.பாபு, மாநில மகளிர் அணி செயலாளர் வனராணி, வேலூர் மண்டல தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.