tamilnadu

img

மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை, ஜூலை 15- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சா புரம் ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சி அடுத்த  தெள்ளானந்தல் கிராமத்தில் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தெள்ளானந்தல் கிரா மத்தில் மலைப்பகுதி உள்ளது. அங்கு ஆயி ரக்கணக்கான மரங்களும், செடி, கொடி களும் உள்ளன. மேலும் தேக்கு, பூவரசன் போன்ற பல வகையான மரங்களை நட்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். கடந்த 2012ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களை வைத்து, மாவட்ட ஆட்சியர் மர விதைகளை நடவு செய்தார். இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் மின்சார அலுவலகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை மின்  நிலையம் அமைத்தால், இயற்கை வளங்கள்  பாதிக்கப்படும்.  எனவே அந்த மலைப்பகுதி யில் துணை மின் நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.