திருவண்ணாமலை
திருவண்ணாமலை அத்தியந்தல் பகுதியில் உள்ள அருணாச்சலேஸ்வரர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பவர் அமெரிக்கா ஆர்கான் மாகாணத்தை சேர்ந்த 32 வயது பெண்(ஆசியாலி) கடந்த 8 மாதங்களாக இந்த குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி கிராமத்தை மணிகண்டன்(வயது 34) தனது குடும்பத்தை துரந்து சாதுவாக இந்த பகுதியில் வசித்து வருகின்றார். மேலும் மணிகண்டன் கிரிவலப்பாதை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரியும் போது அருணாச்சலேஸ்வரர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமெரிக்கா பெண்ணை பார்த்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக அந்த பெண்ணை சாமியார் கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில்,இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் அமெரிக்கா பெண் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது அமெரிக்க பெண் சாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சாமியாருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் அமெரிக்க பெண் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய காவல்துறையினரிடம் ஓப்படைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் அமெரிக்க பெண்ணிற்கு சிறு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த சாமியாரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியாக இருந்த அமெரிக்க பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.