tamilnadu

செய்தித் துளிகள்

செங்கல்பட்டு: 134 பேருக்கு தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1988ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 788 பேர் குணமடைந்த  நிலையில், 12 பேர் இறந்தனர். 1184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

காஞ்சிபுரம்: 18 பேருக்கு தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்துறை ஊழியர்கள் 2 பேர் உள்ளிட்ட மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 321 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேருக்கு மேல் உயிரிழந்து உள்ளனர். 208 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்: 57 பேருக்கு தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1386ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 732 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்தனர். 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.நகர்: 8 பேருக்கு தொற்று

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 16 பேர் உயிரிழப்பு

சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் உயிரிழந்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், உயிரிழந்துள்ளனர். கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்தனர்.