தி.மலையில் தொற்று 416
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது.
அமைச்சர் மீது புகார்
அமைச்சர் காமராஜ் மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்முடி எம்எல்ஏ விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.
மாட்டை கொன்ற சிறுத்தை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள கல்லாப்பாடியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வேலை தேடி சென்ற பெண்ணிடம் ஆபாச படங்களை காட்டி சில்மிஷம் செய்ய முயன்ற ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த முரளி (32) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெண் கொலையில் ஒருவர் கைது
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதி நாராயணி நகரைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி தீபாவை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தயார் நிலையில் விழுப்புரம் ரயில் நிலையம்
ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் விழுப்புரம் ரயில் நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டு தனிமனித இடைவெளி விட்டு பயணிகள் ஏற வட்டம் வரையப்பட்டு, முன் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.