சென்னை, ஆக. 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே.லட்சுமணன் மறைவுக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிபிஐ தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரும், மார்க்சிய இலக்கி யங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவருமான தே. இலட்சுமணன் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தே.லட்சுமணன், அரசுப் பணியாளர்களை சங்க அமைப்பில் அணிதிரட்டுவதில் முனைப்பாக செயல்பட்டவர். இதனைத் தொடர்ந்து அரசுப் பணி யில் இருந்து விலகி முழு நேரக்கட்சிப் பணியில் ஈடுபடத் தொடங்கியவர். மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வழிகாட்டியாக இறுதி மூச்சு வரை செயல் பட்டவர். அவரது இழப்பு பெரும் வேதனை அளிப்ப தாகும். அன்னாரின் மறைவுக்கும், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலகுழு சார்பில் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. தொல்.திருமாவளவன் டிவிட்ட ரில் வெளியிட்டுள்ள இரங்கலில், தோழர் தே.லட்சுமணனின் மறைவு மிகுந்த வேதனை அளிக் கிறது. அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.