திருவண்ணாமலை,அக்.14- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, அரிசி ஆலை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இ.பி. நகர் ஏ.சி.எஸ். கார்டன் பகுதி யில் தனது குடும்பத்துடன் வசிப்பவர் ஆனந்தன் மகன் அருண்குமார். இவர் அரிசி ஆலை நடத்தி வருகிறார். அருண்குமார் அரிசி ஆலைக்கு சென்றுவிட்டார். அவரது குடும் பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு ஆரணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோ வில் இருந்த 80 சவரன் தங்கநகைகள் மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை யடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குசென்று, அருண்குமார் வீட்டை பார்வையிட்டு, தடயங்களை சேக ரித்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல், ஆரணி பகுதியில் சனிக்கிழமை இரவு, 2 கோவில்களின் பூட்டு உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை யும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.