tamilnadu

img

அண்ணாமலையார் கோவிலில் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை, மார்ச்.17- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  செவ்வாயன்று (மார்ச் 17) புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவக்குழுவினரும், திருவண்ணாமலையை சேர்ந்த மருத்துவக்குழுவினரும் கோயிலுக்கு வந்த மக்களை பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் மத்திய அரசின் மருத்துவ சான்று இருந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படு கின்றனர். இந்நிலையில், மலேசியாவில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு  வந்த 18 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இவர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா வைரஸ் அச்சத்தால்  செவ்வாயன்று (மார்ச் 17)  கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை  குறைவாகவே காணப்பட்டது. மேலும் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு லாட்ஜ்களில் அறை வழங்குவ தற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ள்ளன. மார்ச் 31 ஆம் தேதி வரை ஆசிரமங்களில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்க ப்பட்டுள்ளது.