திருவண்ணாமலை, ஜூன் 13- திருவண்ணாமலையில், பன்னியாண்டி இன மக்க ளுக்கு சாதிச் சான்று தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேங்கிக்கால் முத்தம்மாள் நகர் அலுவல கத்தில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ப.செல்வன், குப்புசாமி, பழனி, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம்.சிவக்குமார், எம்.வீரபத்திரன், டி.கே.வெங்கடேசன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னி யாண்டி சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வரு கிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தை களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்க உரிய சாதிச் சான்று இல்லாததால் சிரமத்தி ற்குள்ளாகி வருகிறார்கள். சாதிச் சான்று கிடைக்காத தால் மத்திய, மாநில அரசு களின் கல்வி உத வித்தொகை உள்பட அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 1976 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கான வகைப்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் பட்டியலில் பன்னியாண்டி சமூகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2008 -2010 ஆம்ஆண்டின் தொடக்கத்தில் பன்னி யாண்டி சமூகத்தினருக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது, திருவண்ணாமலை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் சாதிச் சான்று கிடைக்காமல் இந்த சமூகத்தினர் சிர மப்படுகிறார்கள். எனவே பன்னியாண்டிகள் சமூகத்தினருக்கு எஸ்.சி. சாதிச்சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகதிற்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.