திருவண்ணாமலை, ஏப். 23- திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதி களில் பால் உற்பத்தி செய்யும் விவசாயி களிடமிருந்து, பாலை கொள்முதல் செய்யா மல், புறக்கணிப்பு செய்ததால் விசாயிகள் வேங்கிக்கால் ஆவின் பால் அலுவகம் முன்பு பால் கேன்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்து உள்ளது புனல்காடு கிராமம். இந்த கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 150 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது 80 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி பால் விநியோகம் செய்ய வரும்போது, உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் விவ சாயிகளை அவதூறான வார்த்தை களால் திட்டுவதும், பால் கொள்முதல் செய்யாமல் புறக்கணிப்பு செய்வதும் தொடர்ந்து நடை பெற்று வருவதாக புனல்காடு கிராம விவ சாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வியாழனன்று (ஏப்.23) காலை விவசாயிகள் பால் விநியோகம் செய்ய சென்றபோது, புனல்காடு உற்பத்தியாளர் சங் கத்தில் பலரிடம் பாலை வாங்க முடியாது என்று புறக்கணித்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த விவசாயி கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை வேங் கிக்கால் பகுதியில் உள்ள, திருவண்ணா மலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு ஒன்றிய அலுவலகத்தில் கொண்டுவந்து, வாயில் முன்பு பால்கேன்களை வைத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து ஆவின் நிறுவன ஊழியர் கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். பின்னர், விவசாயிகள் உற்பத்தி செய்யப் படும் பாலை கொள்முதல் செய்ய நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினால், ஏற்க னவே வாழவாதாரம் இழந்து பரிதவிக்கும் விவசாயிகளிடம், ஆவின் நிர்வாகம் மேலும் தாக்குதலை நடத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.