8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையை அடுத்துள்ள நரசிங்கநல்லூர் ஊராட்சியில் தலைவர் சீதாராமன் தலைமையில் விவசாயிகள் மொட்டை அடிக்கும் போராட்டம் நடத்தினர். இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபிராமன், இணை ஒருங்கிணைப்பாளர் அழகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.