tamilnadu

வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு: தனிப்படை அமைப்பு

திருவண்ணாமலை,மே 3-திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த வில்வாரணி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(44). எண்ணெய் வியாபாரி. அப்பகுதியில் உள்ள சூதாட்ட கும்பலிடம் ரூ. 25 லட் சம் கடன் வாங்கி விளையாடி மொத்த பணத்தையும் இழந் துள்ளார். பணம் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டனர். பணம் இல்லை என்றதால் சரவணனை கடந்த 28ஆம் தேதி சூதாட்டக் கும்பல் கடத்தியுள்ளது. அவரது மனைவிக்கு போன் செய்து, 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள் ளது அந்த கும்பல்.இதனைத்தொடர்ந்து, சரவணனின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். அதன்பேரில், குழு அமைத்து தேடினர். கடந்த, 30ஆம் தேதி செங்கம் துக்காப் பேட்டை பெட்ரோல் பங்க் அருகே காத்திருந்த அந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால், சுதாரித்த கும்பல் சரவணனுடன் தப்பியது. ஆனால், காவலர்கள் விடாமல் துரத்திச் சென்று வேட்டவலம் பகுதியில் அவர்களை பிடித்து, சரவணனை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையை சேர்ந்த அன்சர் அலி (30), சையத்முஸ்தபா (35), தஸ்தகீர்(23), இம்தியாஸ் (35), மற்றும் செங்கத்தை சேர்ந்த துரை பாண்டியன் ஆகியோர் கடத்தியது தெரியவந்தது. ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்து இரண்டு காரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது.