tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செப் 25 முதல் 29 வரையிலான 5 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாவட்டத் தலைவர் சி.அ.முருகன் தலைமை தாங்கினார், ச.டேவிட்ராசன் முன்னிலை வகித்தார், மாவட்டச் செயலாளர் அந்தோணிராஜ், மாநில நிர்வாகிகள் ச.மோசஸ், பிரசண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சாரத்தில் தேசியக் கல்வி கொள்கை 2019 திரும்பப் பெற வேண்டும்,அரசு பள்ளிகளை மூடாமல், மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும், தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்காமல் பாதுகாத்திட வேண்டும், தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணை எண் 100 , 101 , 145 , 164 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்  என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

;