திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் புதூர், அருணாச்சலம் –அமுதா தம்பதியின் மகள் கனிமொழிக்கும், கலசபாக்கம் அடுத்த பெரியகாலூர் ஆறுமுகம் மகன் தமிழ்வாணனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு, தமிழ்வாணன் தனது மனைவியை கொடுமைப்படுத்துவதாகக் கூறி, கனிமொழி மற்றும் அவரது தாயார் அமுதா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.