tamilnadu

img

மலை கிராம மக்களுக்கு வளர்ச்சிப் பணிகள்

திருவண்ணாமலை, மே 18- திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை கிராம மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி ஆய்வு செய்தார்.தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அக்கரப்பட்டி, கீழ்வலசை, மேல் வலசை ஆகிய மலைப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக இப்பகுதிகளில் மலைவாழ் மக்கள்; நலனுக்காக அமைக்கப்படும் சாலை பணிகளை ஆய்வு செய்தார். மேலும் உள்செக்கடி முதல் கீழ்வலசை வரை புதியதாக ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள சாலை பகுதிக்கு இடம் தேர்வுச்செய்வதில் அமைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா, திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ப.சந்திரா, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் கூதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றியப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.