tamilnadu

மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்று மோசடி விவசாயி குடும்பத்துடன் முற்றுகை

திருவண்ணாமலை, மே.11 - திருவண்ணாமலை அருகே, விவசாய  நிலத்திற்கு மின் இணைப்பு தருவதற்கு இடைத்தரகர் மூலம் 70 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு  மோசடி செய்துள்ளதாக விவசாயி குற்றச்சாட்டியுள்ளார். பணம் கொடுத்தும் மோசடி செய்யப்பட்ட விவசாயி,  தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை அருகே உள்ள பெரிய  பாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி  சம்பத் என்பவர், தனது நிலத்தில் ஆழ்துளை  கிணறு அமைத்து உள்ளார். அந்த கிணற்றுக்கு  மின் இணைப்பு கேட்டு அத்தியந்தல் மின்வா ரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இணைப்பு வழங்க அதிகாரிகள் ஒரு லட்சம்  ரூபாய் கேட்டுள்ளனர். இதையடுத்து செங்கம் பகுதியைச் சேர்ந்த  அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், சம்பத்தை மின்வாரிய அதிகாரிகளிடம் அழைத்து சென்று 70 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் மின் இணைப்பு வழங்கவில்லை. இதனையடுத்து சம்பத் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து சமரசம் பேசிய அதிகாரி கள் மேலும் 70 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ள னர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி  சம்பத், திருவண்ணாமலை  வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலு வலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டார்.