tamilnadu

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயி தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை, மார்ச் 16- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (42). இவரது குடும்பத்தினர், தலைமுறையாக அனுபவித்து வரும் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் சிலர் ஆகிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி காவல் நிலையத்திலும், மாவட்ட நிர்வாகத்திலும் பலமுறை புகார் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அந்த நிலம் முருகனுக்கு உரிமையானது என்றும், அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் காலி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக ஆவணம் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ள வர்கள் இடத்தை காலி செய்யவில்லை. மேலும் முருகன் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய தாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயி முருகன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திங்களன்று (மார்ச் 16) மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்தார். அப்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த காவல்துறை யினர் உடனே அவரை தடுத்து நிறுத்தினர்.