திருவண்ணாமலை,ஆக.18- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ளது தரணி சர்க்கரை ஆலை. இந்த ஆலைக்கு கரும்பை விற்பனை செய்த விவசாயிகள் அதற்கான பணத்தை பெற முடியாமல் பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர். கரும்பு பாக்கி பணம் வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளு டன் 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் கடந்த 2020 ஜனவரி மாதத்திற்குள் பாக்கி பணத்தை தருவதாக ஆலை நிர்வா கம் எழுத்து பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் வழங்கவில்லை. கடந்த வருடம் அரைவைப் பருவத்திற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 26 கோடி ரூபாய் பணத்தை வழங்கக் கோரியும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளாத அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போளூர் தரணி சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிப்ரவரி 25ஆம் தேதி கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை நிர்வா கத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் நிலுவைத் தொகையை மார்ச் 31ஆம் தேதிக்குள் அளிப்பதாக தெரிவித்த னர். ஆனால் விவசாயிகளோ மார்ச் 31ஆம் தேதியிட்ட காசோலையினை தருமாறு வற்புறுத்தினர். ஆலை நிர்வாகமோ பணமா கத்தான் தருவோம் என்றும் காசோலை யாகத் தரமாட்டோம் எனவும் உறுதியாக தெரிவித்தது. இதனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்போவதாக நடைபயணமாக திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் கரைப் பூண்டி பாலம் அருகே செல்லும்போது காவல் துறையினரால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதி விவசாயி கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இரவு 9 மணி வரை காத்திருந்தும், ஆட்சியர் வராததால் மனு அளிக்க இயலவில்லை. பிப்ரவரி 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், விவசாயிகளையும், ஆலை நிர்வாகிகளை யும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய பாக்கி பணத்தை மார்ச் 15 முதல் 31ஆம் தேதிக்குள் வழங்கி விடுவதாக நிர்வாகிகள் உறுதியளித்தனர். ஆனால், எந்த வகையிலும் விவசாயி களுக்கு பணம் வரவில்லை. தொடர்ந்து மீண்டும், போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். கொடாகண்டன் வேதா ளமும், விடாகண்டன் விக்கிரமாதித்தனும் போல, கரும்பு பாக்கி தர மறுக்கும் சக்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து செவ்வா யன்று (ஆக.18) கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. கே.பாலமுருகன் தலைமை தாங்கி னார். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் வி.சுப்பிரமணி, உதயகுமார், பி.செல் வன், பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.