ஊரடங்கிலும் வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை பாராட்டும் நிகழ்வு சனிக்கிழமையன்று (மே 16) நாடு முழுவதும் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வின் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில், வாலிபர் சங்கத்தினர் விவசாயிகளுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.