சென்னை, நவ. 12- சென்னை அறிவாலயத்தில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்தது சட்டவிரோதமானது. இதுகுறித்து சட்ட வல்லுனர்களை கலந்து பேசி நீதிமன்றத்தை அணுகுவோம். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வுடனான எங்கள் கூட்டணி தொடரும், இணைந்து பணியாற்றுவோம்” என்றார். இதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி னார். சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.பி., முக மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திக துணைத் தலைவர் கலிபூங்குன்றன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீர பாண்டி யன், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட பலர் பேசினர்.