திருவண்ணாமலை, ஜூன் 17- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூரில் கோடை விழா ஜூன் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. மாநில அமைச்சர் கள் எம்.சி.சம்பத், வெல்ல மண்டி நடராஜன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் க.சு.கந்த சாமி, எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர் செல் வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் நாளில் மலைவாழ் மக்களில் பய னாளிகள் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. நிறைவு நாளான ஞாயி றன்று(ஜூன்16) காலை முதலே பல்வேறு மாவட்டங் களிலிருந்து சுற்றுலா பய ணிகள் குவிந்தனர். ஜவ்வாது மலையிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங் களை சேர்ந்த மக்களும் விழாவை காண அங்கு திரண்டனர். விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், நாய் கண்காட்சி, கிராமிய கலை நிகழ்ச்சி களும் இடம் பெற்றன. மேலும் மாவட்ட விளை யாட்டுத் துறை சார்பில் ஆண்களுக்கு மினி மராத் தன், ஆண்கள் மற்றும் பெண் களுக்கு கயிறு இழுத்தல், குண்டு எறிதல், பெண்க ளுக்கு இசை நாற்காலி போட்டிகளும் நடத்தப்பட் டன. ஜமுனாமரத்தூர் ஏரியில் வாட்டர் பால், கமாண்டோ நெட், பர்மா பிரிட்ஜ், ரிவர் கிராசிங் போன்ற சாகச விளையாட்டு கள் நடந்தன. மேலும் மிதி வண்டி, படகுப், வாத்து பிடிக் கும் போட்டி நடத்தினர். ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், பொருட்களின் விற் பனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு ஆட்சியர் க.சு. கந்தசாமி தலைமையில் நிறைவு விழா நடந்தது.