tamilnadu

img

8 வழிச் சாலைக்காக கைப்பற்றிய நிலத்தைக் கேட்டு விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 27- ஐந்து மாவட்ட விவசாயி கள்  ஒட்டுமொத்தமாக பாதிக் கப்படும்  திட்டமான  8 வழிச்  சாலை திட்ட வழக்கில், சென்னை  உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்  படுத்தி அரசின் பெயரில் மாறு தல் செய்யப் பட்ட நிலங்களை, அந்தந்த விவசாயிகள் பெயரி லேயே மாற்றம் செய்யக் கோரி  மனு கொடுக்கும் போராட்டம் திருவண்ணாமலையில் நடத்தப்  பட்டது. சென்னை-சேலம் இடையே  8 வழிச் சாலை அமைக்கப்படு வதை கண்டித்து, விவசாயி களும், விவசாய சங்கங்களும், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டி யக்கம் மற்றும் அரசியல் கட்சி யினரும், பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தி வந்தனர்.  தாய்மண்ணை, மலையை, வனத்தை, நீராதா ரத்தை பாதுகாக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காஞ்சிபுரம், திருவண்ணா மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்ட விவ சாயிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து இயக்கங்களை நடத்தினர். 8 வழிச் சாலை அமைப்பதை கண்டித்து, கருப்பு  கொடி போராட்டம், எதிர்ப்பு பேரணி, கையெழுத்து இயக்கம்,  சாலை மறியல், கிராம சபை களில் முற்றுகைப் போராட்டம் என பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருவண்ணாமலை முதல் சேலம் வரையிலான  நடைபயணம் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்தியது.   கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த நடை பயணத்திற்கு தலைமை தாங்கினார்.  இதன் பின்னணியில், கடந்த ஏப்ரல் 8 ஆம்தேதி   எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது  என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்சநீதிமன்றம் உயர்  நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக் கால தடை விதிக்க மறுத்து விட்டது. 8 வழிச் சாலை திட்ட  வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தி, அரசின் பெயரில் மாறுதல் செய்யப்பட்ட நிலங்களை, அந்தந்த விவசாயிகள் பெயரி லேயே மாற்ற உத்தரவை பிறப்பித்து 2 வாரகாலத்திற்குள் தெரிவிக்க வேண்டும், 8 வார காலத்திற்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டது. எனவே, விவ சாய நிலங்களை, பெயர் மாற்றம்  செய்யக் கோரி, மனு கொடுக்கும்  போராட்டம் திருவண்ணாமலை யில் நடத்தப்பட்டது.   8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்திறகு கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் வழக்கறி ஞர் எஸ். அபிராமன் தலைமை தாங்கி னார்.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, கூட்டமைப்பின் நிர்வாகிகள் இல. அழகேசன், பிரகாஷ், அசோக், தவிச. டி.கே. வெங்கடேசன், சிஐடியு இரா. பாரி, விதொச எம்.பிரகல நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மனு கொடுக்க வந்த விவசாயிகளை  போலீசார் தடுத்ததால், மாவட்ட  ஆட்சியர் அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர். முன்ன தாக வேங்கிக்கால் மின்சார வாரிய அலுவலகம் அருகிலி ருந்து துவங்கிய ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.