திருவண்ணாமலை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் அய்யம்பாளையம் பகுதிக்கு அருகே கர்நாடகாவுக்கு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில் 2 பெண் உட்பட 5 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிரே வந்த லாரி,கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.