tamilnadu

திருவண்ணாமலையில் கொரோனா பரவலை தடுக்க 10 நாட்கள் கடையடைப்பு

திருவண்ணாமலை, ஜூன் 21- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோ‌னா வைரஸ் தொற்றின் தாக்கம் தினசரி 20, 30 என அதிகரித்து வந்த நிலையில்,  சனிக்கிழமை ஒரே நாளில் 130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. மேலும் 3 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதனால் பொதுமக்களும், வணிகர்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 21 முதல்  ஜுன் 30 வரை 10 நாட்களுக்கு தாங்களாக முன்வந்து அத்தியாவசிய தேவையான பால், மருந்துக் கடைகள், உணவகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட வணிகர்கள் முடிவெடுத்தனர். அதனடிப்படையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

;