திருப்பூர், டிச. 19 – திருப்பூரில் பனியன் தொழிற் சாலை ஒன்றின் முதலாளி, பேப்பர் வெயிட்டை வீசி தொழிலாளியை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் உண் மையை மறைத்து, தொழிலாளி துணியைத் திருடியதாக பொய் குற் றம் சுமத்திய முதலாளிக்கு, போலீ சார் உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், அரசவ னங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவர் கடந்த 15 ஆண்டு களாக திருப்பூரில் வசித்து வருகி றார். அனுப்பர்பாளையம் அருகே திலகர்நகர் ஜெ.பி. கிளாத்திங் கம் பெனியில் கடந்த மூன்று ஆண்டு களாக கட்டிங் இன்சார்ஜ் ஆக சங்கர் வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி கம்பெனியில் கட்டிங் பணிகளை செய்து கொண்டிருந்த போது, துணி பற்றாக்குறையாக இருந்ததால் கூடுதல் துணியை எடுத்து வந்து கட்டிங் செய்திருக்கி றார். அப்போது, கம்பெனி முதலாளி பங்கஜ்குமார் என்பவர், தனது அறைக்கு சங்கரை அழைத்து துணி களை கட்டிங் செய்தது பற்றி கேட்டி ருக்கிறார். ஏற்கெனவே 2 கட்டு துணிகளை கட்டிங் செய்த நிலை யில், பற்றாக்குறை ஏற்பட்டதால், மூன்றாவது கட்டு துணியை எடுத்து கட்டிங் செய்யக் கொடுத்ததாக சங்கர் கூறியிருக்கிறார். அப்போது, பங்கஜ்குமார் திடீரென சங்கரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். யாரைக் கேட்டு மூன்றாவது கட்டு துணியை வெட்டுவதற்கு கொடுத் தாய் என கேட்டிருக்கிறார். சற்றும் எதிர்பாராத தாக்குதலால் சங்கர் அதிர்ச்சி அடைந்தார். அவர் அறையை விட்டு வெளியே வந்து, கட்டிங் செய்த துணி பற்றிய பதி வேட்டில் இருந்த விபரங்களை சரி பார்த்திருக்கிறார். அப்போதும் ஆத்திரம் தீராத பங்கஜ்குமார், தனது டேபிளில் இருந்த பேப்பர்வெயிட்டை எடுத்து சங்கர் மீது வீசியெறிந்தார். சங்கரின் இடுப்புப் பகுதியில் பேப்பர் வெயிட் பலமாகத் தாக்கியதில் வலி தாங்காமல் அவர் சுருண்டு விழுந்தார். பின்னர் அவர் மருத்துவ மனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிஐடியு பனியன் சங்க அலுவலகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் 15,வேலம்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி காலை புகார் கொடுத்தார். எனினும் இந்த புகார் மனு மீது போலீசார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மேற்படி கம்பெனி முதலாளி பங் கஜ்குமார், அன்று மாலை, சங்கர் துணியைத் திருடிவிட்டதாக ஒரு பொய் புகார் கொடுத்தார். அந்த புகாரைப் பெற்றுக்கொண்டு சங் கரை குற்றவாளியைப் போல் காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர். உண்மையாக பாதிக்கப்பட்ட சங்கர் கொடுத்த புகார் மீது நடவ டிக்கை எடுக்காத காவல் துறையி னர் முதலாளியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரிடம் பொய் புகாரை வாங்கி, சங்கரையே குற்ற வாளி போல் நடத்தியுள்ளனர். சிஐடியு பனியன் சங்கத் துணைத் தலைவர் எம்.பாண்டியராஜ் காவல் நிலையத்தில் இதற்கு கடும் ஆட் சேபம் தெரிவித்தார். தொழிலாளியை தாக்கிய முதலாளி மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும், முதலா ளிக்கு ஆதரவாக காவல் துறை செயல்படுவது கண்டிக்கத்தக்கது, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவோம் என்று சிஐடியு சங்கத்தினர் கூறியுள்ளனர்.