tamilnadu

img

நாங்கள் வருகிறோம்!

இடுவாய் என்றால் தமிழகத்தில் பலருக்கு நினைவுக்கு வருவது தியாகி கே.ரத்தினசாமி என்ற பெயர்தான்! அந்த பஞ்சாயத்துத் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள் செல்வாக்கு பெற்ற ரத்தினசாமி. அப்பதவிக்கு உரிய குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி நேர்மையாக, ஊழல் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்டாக அனைத்துத் தரப்பு ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு சேவை செய்தவர் ரத்தினசாமி. எனவே 17 ஆண்டுகள் கடந்து இன்றளவும் இடுவாய் மக்கள் தியாகி ரத்தினசாமியை போற்றி வருகின்றனர். இடுவாய் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி பலம் பொருந்திய இயக்கமாக மக்களோடு மக்களாக கலந்து நிற்கிறது. இப்போது ரத்தினசாமியின் பாரம்பரியத்துடன், மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சி களம் காண்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர், மக்களுடன் இரண்டறக் கலந்து இருப்பவர் கே.கணேசன் பஞ்சாயத்து தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார். ரத்தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட் கட்சியினர் வருகிறார்கள். கே.கணேசன் விமானம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த முறை “நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்!” என்ற இடுவாய் மக்களின் வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே அவர் வெற்றி வேட்பாளராக வலம் வருகிறார்.

 

கடந்த காலத்தில்...

வீட்டுமனைப் பட்டா
புதிய பகுதி உருவானபோது, பாரதிபுரம் என பெயர்  வைத்தது அன்றைய பஞ்சாயத்து தலைவர் ரத்தின சாமிதான், அதுமட்டுமின்றி திருவள்ளுவர் நகர், வாசுகி நகர் என பெயர் சூட்டியதும் அப்போதுதான். 44 ஏக்கர் பொட்டல் காட்டில் பாரதிபுரம் உருவாக்கப் பட்டபோது, இடுவாயில் காலங்காலமாக வீடில்லாத ஏழைகள் 400க்கும் மேற்பட்டோருக்கு பட்டா பெற்றுக் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. முறைகேடாக வாங்கி யவர்களின் பட்டா ரத்து செய்யப்பட்டது. வாசுகி நகரில் 386 பேருக்கு பட்டா பெற்றுத் தரப்பட்டது. அதி காரம் இல்லாமலேயே எம்ஜிஆர் நகரில் மக்களுக்குப் பட்டா வாங்கித் தரப்பட்டது.
பள்ளிக்கூடம்
ரத்தினசாமி காலத்தில் கடுமையான முயற்சி எடுத்து இடுவாயில் அரசு உயர்நிலைப் பள்ளி உருவாக் கப்பட்டது. அதற்கு முன்பு பல கிலோமீட்டர் தூரம் சென்று மாணவர்கள் உயர்நிலை பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதன் பிறகு, சீராணம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முயற்சியில் துவக்கப் பள்ளி ஏற்படுத்தப்பட்டது.                                                                                                      குடிநீர் பிரச்சனை
ரத்தினசாமி வெற்றி பெற்றபோது, குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. 5 கி.மீ. தூரம் சென்று ஒரு குடம் குடிநீர் கொண்டுவரும் நிலை இருந்தது. மக்கள் குடி நீருக்கு தவிக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக் குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. இடுவாய் ஆதிதிராவிட காலனி மக்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் சமுதாயக் கூடம் கட்டித்  தரப்பட்டது. சுடுகாட்டிற்கு காங்கிரீட் சாலை அமைத் துத் தரப்பட்டது. 50க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. பொதுக் கழிப்பிடங்கள் இரண்டு இடங்களில் கட்டித் தரப்பட்டது. சின்னக்காளிபாளை யம் சாலையில் ரேசன் கடை கட்டித் தரப்பட்டது. தனி யாரிடம் இருந்த சுடுகாட்டு இடம் மீட்டுத் தரப்பட்டது. அதிகாரத்தில் இல்லாதபோதும் சமீப காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், குடிசை மாற்று வாரிய திட்டத்தில் 56 பேருக்கு வீடு கட்ட தலா ரூ.2,10,000 நிதி பெற்றுத் தரப்பட்டது. சீராணம்பாளையத்தில் ஒரு பகுதியில் மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் நிற்கும். வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்றி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி தடுப்புச் சுவர் கட்டித் தரப்பட்டது. சீராணம்பாளையத்தில் பொதுக் கழிப்பி டம் கட்டித் தரப்பட்டது.  அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பார பட்சமின்றி, மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாக் கள், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வு கள் நடத்தி மக்கள் ஒற்றுமை, நல்லிணக்கம் பாது காக்கப்பட்டது.   

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு
கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்த  ஊராட்சியில் 2508 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்க ளுக்கு சம்பள பாக்கி இருந்தபோது போராடி பெற்றுக் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. இடுவாய் பகுதியில் பேருந்து வசதி குறைவாக இருந்த நிலையில் மறியல் போராட்டம் நடத்தி கூடுதல் பேருந்து நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

 

திமுக கூட்டணி வேட்பாளர்களின் வாக்குறுதிகள்

அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டு  காலமாக திறக்கப்படாத இரு பொதுக் கழிப்பிடங் களை உடனே திறக்கச் செய்து, மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வருவோம். பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் இருக்கும் 3 பொதுக் கழிப்பிடங்கள் சீரமைக்கப்படும். பாரதிபுரம், இடுவாய் சமுதாயக்கூடங்கள் சீர மைக்கப்படும். முடங்கிக் கிடக்கும் குப்பை அகற்றம், சாக்கடை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி நடப்பதற்கும், போதுமான ஆட்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பராமரிப்பு இல்லாத நூலகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். மாணவர்கள், இளைஞர்கள் வளர்ச்சிக்கு விளையாட்டு மைதானம், விளையாட்டு கருவிகள் ஏற்பாடு செய்யப்படும். பாரதிபுரம், வள்ளுவர் நகரில் பல ஆண்டு கால மாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வாங்கித் தர நட வடிக்கை எடுப்போம். இடுவாய் கிராமம் விரிவடைந்துள்ள நிலையில் தேவையான கூடுதல் குடிநீர் பெறவும், வீட்டுக் குடி நீர் இணைப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக் கப்படும். இடுவாய் ரேசன் கடையில் 2,600க்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ளன. இதில் 600 ரேசன் கார்டுகளுக்கு ஒரு கடை என்ற அளவில் கூடுதல் ரேசன் கடைகள் உருவாக்க முயற்சி செய்யப்படும். எரியாமல் இருக்கும் தெரு விளக்குகளைப் பழுது நீக்கவும், விரிவடையும் பகுதிகளுக்கு புதிய தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக் கப்படும். இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், இங்குள்ள 4 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மக்கள் ஆதரவுடன் தேவையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவிக்கும் சம்பள உயர்வு பெற்றுத் தரப்ப டும். இங்குள்ள விவசாயிகளுக்காக பாரதிபுரத்தில் வாரச் சந்தை அமைக்க முயற்சிக்கப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளை அலுவலகத்தில் பொது இ சேவை மையம்  செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடுவாய் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அத்துடன் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் பேருந்து வசதிக்கு உரிய முயற்சி செய் யப்படும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூடுதலாகப் பெற்று ஊராட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நேர்மையான முறையில், லஞ்ச, லாவண்யமில்லாத ஊராட்சி நிர்வாகத்தை நடத்துவோம் என திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

 

பதவி

வேட்பாளர் 

  இடம் 

 சின்னம் 

ஊராட்சிமன்றத் தலைவர்

 கே.கணேசன்         

  இடுவாய்         

விமானம்

மாவட்ட ஊராட்சி வார்டு   உறுப்பினர்

   ஏ.ராமசாமி

மாவட்ட ஊராட்சி 3ஆவது வார்டு    

 கை

திருப்பூர் ஊராட்சி  ஒன்றியம்

 த.பிரபு (எ)  பாலசுப்பிரமணியம்

ஊராட்சி ஒன்றிய  7ஆவது வார்டு

 உதய சூரியன்

வார்டு உறுப்பினர்

   ரா.சுரேஷ்குமார்

ஊராட்சி 1ஆவது  வார்டு

சீப்பு

வார்டு உறுப்பினர்

     சர்மிளா செல்வராஜ்

ஊராட்சி 2 ஆவது  வார்டு

சாவி

வார்டு உறுப்பினர்

   ஈஸ்வரி ராமசாமி

ஊராட்சி 3 ஆவது  வார்டு

சீப்பு

வார்டு உறுப்பினர்

 தண்டபாணி

ஊராட்சி 4ஆவது  வார்டு

சாவி

வார்டு உறுப்பினர்

மயிலாத்தாள் சண்முகசுந்தரம்

ஊராட்சி 5ஆவது  வார்டு

கார்

வார்டு உறுப்பினர்

ஈஸ்வரி பாலசுப்பிரமணி

ஊராட்சி 6ஆவது  வார்டு

சாவி

வார்டு உறுப்பினர்

ராமமூர்த்தி

ஊராட்சி 7ஆவது  வார்டு

சாவி

வார்டு உறுப்பினர்

கார்த்திக்

ஊராட்சி 8ஆவது  வார்டு

கார்

வார்டு உறுப்பினர்

பிரியங்கா   (எ)   சரண்யா விஜயகுமார் 

ஊராட்சி 9ஆவது  வார்டு

சாவி