திருப்பூர், செப். 5 – சுதந்திரப் போராட்டத் தியாகி கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148ஆவது பிறந்தநாள் விழா திருப்பூரில் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் வ.உ.சி. நகரில் தியாகி வ.உ.சிதம்பரனார் உருவப்படம் அலங் கரித்து வைக்கப்பட்டு சுதேதி நண்பர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இப் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், பிரபு, அருண், மாரிமுத்தி, பிஎஸ்ஆர் சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அத்துடன் குமார் நகர் நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீ அஜய் என்ற குழந்தைக்கு வ.உ.சிதம்பரனார் வேடமணிந்து மாண வர்கள் மத்தியில் வ.உ.சி. சிறப்புகள் நினை வூட்டப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.