tamilnadu

img

வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

 அவிநாசி, ஆக. 8- அவிநாசி அடுத்து ஆட்டையாபாளையம் அருகே வேன் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினார்.  அவிநாசியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வேன் ஒன்று வியாழனன்று மாலை சென்று கொண்டிருந்தது. இது அவிநாசியை அடுத்து ஆட்டை யம்பாளையத்தை கடக்கும்போது, எதிரே மேட்டுப் பாளையத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இவ்விபத்தில் வேன் ஓட்டுநரான திருச்சி மாவட்டம், சுப்பிரமணிய புரம் பகுதியைச் சேர்ந்த சகாயஜூலி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் என்ற லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக அவிநாசி- மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய சாலை யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இவ்விபத்து குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள் ளனர்.