திருப்பூர், மார்ச் 12- ஊத்துக்குளி ரயிலடி அரசு நடு நிலைப்பள்ளிக்கான இடத்தை ஒப்படைக்கக் கோரி புதனன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவிப்பைத் தொடர்ந்து, வட்டாட்சியர், காவல்துறை துணைகண் காணிப்பாளர் செவ்வாயன்று நடத்திய அமைதிப்பேச்சு வார்த்தையை அடுத்து, போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊத்துக் குளி ரயிலடி பேருந்து நிறுத்தத் தில் அனைத்து கட்சி போராட்ட குழு சார்பில் புதனன்று விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக பேரூர் கழக செயலாளர் கே.கே.ராசுக்குட்டி தலைமை வகித்தார். பேச்சுவார்த்தை முடிவு களை விளக்கி திமுக ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் எம்.சி.பழனிசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார், சிபிஐ தாலுகா கமிட்டி உறுப்பி னர் வி.ஏ.சரவணன், காங்கிரஸ் ரங்கசாமி, முன்னாள் கவுன்சிலர் எம்.கிருஷ்ணன் ஆகியோர் உரை யாற்றினர். முடிவில் முன்னாள் கவுன்சிலர் கோபால்ராஜா நன்றி தெரிவித்தார். முன்னதாக இக்கூட்டத்தில் சிபிஐ தாலுகா செயலாளர் வி.கே.முத்துசாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் கே.ஏ. சிவசாமி, தாலுகா கமிட்டி உறுப் பினர் வி.கே.பழனிசாமி உட்பட திரளானோர் பங்கேற்றனர். மேலும், உயர் நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்தப்பட உள்ள இப்பள்ளிக்கான இடத்தை பெறுவது உட்பட பள்ளிக்கான வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடு படுவது என முடிவு செய்யப் பட்டது.