உடுமலை, மார்ச் 21- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உடுமலை கிளையின் முதல் தலைவ ரும், இந்து ஆங்கில நாளிதழ் நிருபரும், மூத்த பத்திரிகை யாளருமான சீனிவாசன் சனியன்று மரணமடைந் தார். இவரது மறைவை தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி ச.செல்லத்துரை விடுத்துள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகத்தில் துவக்கப்பட்டபோது உடுமலை நகரத்தில் த.வி.வெங்கடேஸ்வரன் முயற்சியால் 1986-87 ல் தொடங்கப்பட்டது. அக்கிளையின் தலைவராக சீனிவா சன் செயல்பட்டார். 1988 ல் உடுமலை நகரில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட அறிவியல் பிரச்சா ரப் பயணத்தை முன்னிற்று நடத்தியவர் சீனிவாசன்.‘ மேலும் 8-12-1988 ல் உடுமலையில் அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளிட் டோர் பங்கேற்ற மிகப்பெரும் அறிவியல் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். இதேபோல், போபாலில் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற நிகழ்வுகளில் பெரும் பங்காற்றியவர் சீனிவாசன் என அந்த இரங்கல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.