திருப்பூர், டிச. 15- ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக் குப்பதிவின் போது, வாக்குச்சாவடி களில் பணியாற்ற உள்ள அலுவலர்க ளுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற் றது. திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தர வின் படி, டிச.27 ஆம் தேதி திருப் பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்ல டம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதற்கட்டமா கவும், டிச.30 ஆம் தேதி அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்க லம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறு கிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வழங் கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சவாடி தலைமை அலுவ லர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை 1, 1ஏ, 3, 4 மற்றும் 5 ஆகிய அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி ஞாயிறன்று மாவட்டத் திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் வாக்குப்பதிவிற்கு முன் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்ப திவின் போது செய்ய வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவிற்குப் பின்னர் செய்யப்படவேண்டிய பணிகள் குறித்து சுமார் 9,837 அலுவ லர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவிநாசி- சேவூர் சாலையில் உள்ள சூலை கொங்கு கலையரங்கத்தில் நடை பெற்ற பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகார்த்தி கேயன் பார்வையிட்டு ஆய்வு செய் தார். மேலும், வாக்குச்சாவடி அலுவலர் களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி டிச.22ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2 மற்றும் 6 ஆகியோருக்கு டிச.26 ஆம் தேதியும் பயிற்சி நடைபெற உள்ளது.