tamilnadu

img

இன்றைய சூழலில் தொழிற்சங்கப் பணி அவசியம்: கே.தங்கவேல் வலியுறுத்தல்

திருப்பூர், மே 30 – தொழிலாளர்களின் சம்பளம்  வெட்டு, வேலை பறிப்பு என உரிமைகளைப்  பறிக்கக்கூடிய சூழ்நிலையில் தொழிற் சங்கங்களின் பணி மிகவும் அவசியமா கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் மாநிலக்குழு உறுப்பினர், திருப் பூர் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலை வர்களில் ஒருவரான தோழர் என்.ஆறு முகம் 7ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி  சனிக்கிழமை திருப்பூரில் கடைப்பி டிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக என்.ஆறுமு கம் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர் தோழர் என்.ஆறுமுகம் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். இதைத் தொடர்ந்து என்.ஆறுமுகம் பணிகளை நினைவு கூர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  நீண்ட காலம் முழுநேர ஊழியராக செயல் ்பட்ட என்.ஆறுமுகம் எளிமையாகவும், அமைதியான முறையிலும், இணக்கமான  அணுகுமுறையுடன் பணியாற்றினார். தொழிலாளர்களைக் குறிப்பாக சுமைப் பணி உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர் களை சங்கமாக அணிதிரட்டுவதில் சிறப்பாக செயல்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழி லாளர்களின் உரிமைப் பறிக்கப்படுகிறது. திருப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிக் கப்படுகிறது. தன்னிச்சையாக உற்பத்தி யாளர் அமைப்பு முடிவு செய்து தொழிலா ளர்கள் சம்பளத்தில் 30 சதவிகிதம் வரை வெட்டுவது இதுவே முதல்முறை. எனவே வரக்கூடிய காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதால், தொழிற்சங்க இயக்கத்தின் பணி மிகவும் முக்கியமானது. தொழிலாளர்களின் உரி மையைப் பாதுகாப்பதற்கான போராட் டத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு கே.தங்கவேல் கூறினார்.

பி.ஆர்.நிலையம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர, ஒன்றியக்குழுக்கள் சார்பில் பழைய பேருந்து நிலையம் எதிரில்  பி.ஆர். நிலையம் முன்பாக தோழர் என்.ஆறு முகம் ஏழாவது நினைவு நாள் நிகழ்வு  கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் மற்றும் சுமைப்பணித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.