tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

வடக்குப் பகுதி கிராமங்களில் குளம், குட்டைகளைத் தூர்வார வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 22 - குளம், குட்டைகளைத்  தூர்வார வலியு றுத்தி, திருப்பூர் வடக்குப் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  திருப்பூர் வடக்குப் பகுதி கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தும் பட்சத்தில் மழைநீரை சேமிக் கவும் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக்கவும் முடியும். விவசாயம், குடிநீர் தேவை களுக்குப் பயன்படுத்த முடியும். ஆகை யால் வடக்குப்பகுதி கிராமங்களில் உள்ள  குளம், குட்டைகளைத் தூர்வாரி ஆழப் படுத்துவதற்கும், தூர் வாரிய மண்ணை விவ சாய நிலங்களுக்குக் கொடுக்கவும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி யிடம் பட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சந்திரசேகரன் மனுக் கொடுத் துள்ளார். 

திருப்பூரில் 15 வருடங்கள் வளர்ந்த மரங்கள் வெட்டியதற்கு எதிர்ப்பு

 திருப்பூர், ஜூன் 22 – திருப்பூரில் 15 வருடங்கள் வளர்ந்த மரங்களை வெட்டியது தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள நாளைய திருப்பூர்  மக்கள் அமைப்பு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக நாளைய திருப்பூர்  மக்கள் அமைப்பின் துணை ஒருங்கி ணைப்பாளர் ப்ரியா பிரகாஷ் என்பவர் திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  வியாழனன்று திருப்பூர் மாநகராட்சி 10 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆசர் நகர் மேற்கு, பாரதிதாசன் நகரில் சுமார்15 வருடம் நன்கு வளர்ந்த மரங்களை சிலரின்  தூண்டுதலால் வெட்டியுள்ளனர். அதை யறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக சேவை அமைப்பான லோட்டஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தோர் மரம் வெட்டி ஆட் களைப் பிடித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மரம் வைத்து வளர்க்க எத்தனை சிரமம்  என அனைவரும் அறிந்தே. மரம் வளர்ப் போம், மழை பெறுவோம், வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசு விழிப்புணர்வு கொடுக்கும் நிலையில் இதுபோன்று மரம் வெட்டும் செயலை  ஏற்க முடியாது. எனவே மரம் வெட்டியவர்களை அவர்கள் வெட்டிய மரங்களின் எண்ணிக் கையில் இரண்டு மடங்கு மரக்கன்றுகளை அப்பகுதியில் நட்டு வைத்துப் பராமரிக் கவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்வுகள் அடிக்கடி  தொடர்வதால் திருப் பூரில் உள்ள மரங்களை மாநகராட்சி அனுமதி இல்லாமல் வெட்டக் கூடாது என  ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி இயற் கையை காக்க வேண்டும் என அவர் கேட்டுக்  கொண்டுள்ளார்.