tamilnadu

திருப்பூா் , நாமக்கல் முக்கிய செய்திகள்

திருட்டு முயற்சியை தடுத்த முதியவருக்கு கத்தி குத்து பெண் உள்ளிட்ட 4 பேர் கைது
அவிநாசி, செப். 30-சேவூர் அருகே ஆலத்தூரில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை தடுக்க வந்த முதியவரை கத்தியால் குத்திய வழக்கில், வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் ஞாயிறன்று கைது செய்தனர். அவிநாசி வட்டம், சேவூர் அருகே ஆலத்தூர் மேடு பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வருபவர் ஆறு முகம் (75). இவரது மனைவி ராமாத்தாள்(67). கடந்த வியாழனன்று நள்ளிரவில், இவர்களது வீட்டிற்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் ராமாத்தாளின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் ஆறுமுகம் மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது ஆறுமுகத்தை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம  நபர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் ஆறுமுகம் வீட்டின் அருகில் உள்ள நூற்பாலைகளில் பணியாற்றி வந்த வட மாநி லத் தொழிலாளர்களிடம் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டனர். இதில், நூற்பாலையில் பணி யாற்றி வந்த 4 தொழிலாளர்கள்தான் ஆறுமுகம் வீட்டில் திருட முயன்றது தெரியவந்தது. இதைய டுத்து ஜார்கண்ட் மாநில கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்தாஷ்(19), இவரது மனைவி ராஜேஸ் வரி(17), அதே பகுதியைச் சேர்ந்த மின்ட்யாதவ்(24), மகேஷ்யாதவ்(24) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மின்தடை
பல்லடம், செப். 30-பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி, சாலைப்புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (அக். 1) செவ்வாயன்று மாதாந்திரப் பாராம ரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரியச் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.  அதன்படி செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகர், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமி கவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின்நகர், சின்னி யம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி பகுதிகளிலும், சாலைப்புதூர் துணை மின்நிலை யத்திற்குட்பட்ட சாலைப்புதூர், செஞ்சேரிபுத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி,கம்மா ளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்தி புரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப் பாளையம், சேத்தம்பள்ளி, எஸ்.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிக்கப்பட்டுள்ளது.

அக்.2ல் மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
நாமக்கல், செப். 30-காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, அக்.2-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில், காந்தி பிறந்த (அக்.2) தினத்தை முன்னிட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள், கிளப்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அந்நாளில் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத் தும் மூடியிருக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை திருமணம் செய்தவா் போக்சோ சட்டத்தில் கைது
நாமக்கல், செப். 30-திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்த தும்மனாம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (21). இவா் கடந்த 2018-இல் பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் தங்கி கூலி வேலை பார்த்த போது, 15 வயதே ஆன தனது மாமன் மகளை காத லித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தற் போது மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் சிறு மிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவா்கள் சிறுமிக்கு ஆலோ சனை வழங்கி, காவல் நிலையத்தில் புகார் செய்யு மாறு கூறியுள்ளனா்.  இதையடுத்து, சிறுமி ஞாயிற்றுக்கிழமை அளித்த  வாக்குமூலத்தின் படி, தங்கராஜ் மீது அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தங்கராஜை கைது செய்து  சிறையில் அடைத்தனா்.