அவிநாசி, அக். 4- அவிநாசியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளிருந்த தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் காவல் துறை யினர் தேடி வருகின்றனர். அவிநாசி அருகே சாலையப் பாளையம், புளியங்காடு பகுதியில் குடியிருந்து வருபவர் சதீஷ்குமார்(40). இவர் செவ்வாயன்று மாலை தனது வீட்டைப் பூட்டி விட்டு,குடும்பத் துடன் வெளியூர் சென்றுள்ளார். புதன் கிழமை மாலை திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைக் கப்பட்டு,பிரோவில் வைத்திருந்த தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் 25ஆயிரம் ரொக்க பணம், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.