tamilnadu

வெறும் வேசமாக நடத்தப்பட்ட முதல்வருடனான கலந்துரையாடல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்

திருப்பூர், நவ.6- திருப்பூரில் முதல்வருடனான விவசாயிகள் கலந்துரையாடலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள் ளிட்ட முக்கிய அமைப்புகளின் விவ சாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு அனு மதி மறுக்கப்பட்டதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட் டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமி ழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெள்ளியன்று திருப் பூர் மாவட்ட வருகை தருவதாக வும்,  அதையொட்டி விவசாய சங்கங் களின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடல் நடத்துவார் என் றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத னடிப்படையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் உட்பட விவ சாய சங்கத் தலைவர்கள் 15 பேர் முதல்வரை சந்தித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக் கைகளை முன்வைக்க இருந்தோம்.

இதற்காக கடந்த நவ.4 ஆம் தேதி யன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வரவைத்து  கொரோனா நோய்த் தொற்று  உள்ளதா என்று சோதனை மேற்கொண்டனர்.  இந்நிலையில்,  திடீரென்று வெள்ளியன்று காலையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைத்து  மேற்காண் கலந்துரையா டலில்  கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் முழுவ தும் செயல்படும் அமைப்பாகும். திருப்பூர் மாவட்டத்திலும் மாதா மாதம் நடைபெறும் குறைதீர்ப்புக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு,  விவசாயிகளின் அடிப்படையான கோரிக்கைகளை அதிகாரிகள் மட் டத்தில் முன்வைத்து வருகிறது.

இத் தகைய சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்து விவாதிக் கும் அமைப்பின் பிரதிநிதிகளை  கலந்துரையாடலில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்பது சரியான அணுகுமுறை அல்ல. குறிப்பாக, முதலமைச்சர் உட னான சந்திப்பில் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை முன் வைக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் மட்டுமின்றி தாராபுரம் ஈஸ்வரமூர்த்தி, மலரவன் ஆகியோரை கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக, பெரும்பகுதியானவர்கள் ஆளும்கட்சிக்கு சாதகமானவர்களை கலந்து கொள்ள செய்துள்ளது என் பது முதலமைச்சர் உடனான விவ சாயிகள் கலந்துரையாடல் கூட்டம் வெறும் கண்துடைப்பு வேசமாக மாறியுள்ளது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு வன்மையாக கண்டிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.