tamilnadu

தீக்கதிர் செய்தி எதிரொலி அவிநாசியில் போக்குவரத்து காவல் துறையினர் ஆலோசனை

அவிநாசி, ஜூன் 15- அவிநாசியில் விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக தீக்கதிரில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இது சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதை யடுத்து காவல்துறையினர் சமூக ஆர்வ லர்கள் உள்ளிட்ட சிலரை அழைத்து அவசர  ஆலோசனை நடத்தி உள்ளனர்.     அவிநாசி நகரப்பகுதி மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில், சேவூர் செல்லும் சாலை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருமண விசேஷ நாட்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனால் பள்ளி செல்லும் குழந் தைகள், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டி கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.   இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய காவல் துறையினர் சோதனையில் ஈடுபடுவதாக கூறி வாகன ஓட்டிகள் மீது  வழக்குப் பதிவு  செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர்.  இதனை  அம்பலப்படுத்தி தீக்கதிர் நாளிதழில் செய்தி  வெளியானது.  இச்செய்தி சமூக வலை தளங்களில் அதிகமாக வரவேற்பு பெற்றது.   இந்நிலையில் வெள்ளியன்று போக்கு வரத்து காவல்துறை ஆய்வாளர் உள்ளிட் டவர்கள் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரை மட்டும் அழைத்து ஆலோசனை ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலால் பலதரப்பட்ட மக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதனால் தான் தீக்கதிர் செய்தி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன. இதனை யொட்டி காவல்துறையினர் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள்,  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்து  ஆலோசனை நடத்தி இருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.