tamilnadu

img

திருப்பூரில் ஸ்விகி நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூர், மே 4 -திருப்பூரில் ஸ்விகி எனப்படும் உணவு விநியோக ஆன்லைன் நிறுவனத்தில் வேலை செய்வோர் கிலோ மீட்டருக்கு ரூ.7 பயணப்படி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் ஸ்விகி நிறுவனக் கிளை இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் மூலம்உணவகங்கள் பதிவு செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்குநேரடியாக வீட்டுக்கு உணவுகொண்டு சென்று வழங்கப்படுகிறது. திருப்பூர் கிளையில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஸ்விகி உணவு விநியோகிப்பாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சனியன்று ஸ்விகி பணியாளர்கள் உணவு விநியோகத்தை நிறுத்திவிட்டு செரீப் காலனியில் உள்ள ஸ்விகி அலுவலகத்தின் முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கோவை, சேலம், ஈரோடு நகரங்களில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு கிலோமீட்டருக்கு ரூ.7 என்ற அளவில்பயணப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பூரில் மட்டும் ரூ.5 தான் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக பல முறை ஸ்விகி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம். எனினும் பயணப்படியை உயர்த்தி வழங்காமல் இருக்கின்றனர். எனவே எங்களுக்கு உடனடியாக இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.இதற்கிடையே ஸ்விகி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தகவல் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக நிறுவனத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி இளைஞர்களிடம் சமரசம் செய்தனர். இதையடுத்து ஸ்விகிஊழியர்கள் போராட்டத்தைமுடித்துக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.