திருப்பூர், அக். 24- தீபாவளி பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யம் ஆண்டுதோறும் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத் தில்லா தீபாவளியினை கொண்டாடு வது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சா ரம் மேற்கொண்டு வருகின்றது. அத்து டன் தீபாவளிக்கு முன்பாகவும் பின்பா கவும் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்க ளில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள் ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர் கள் மற்றும் பொது மக்கள் கடைபி டிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி தயாரிப்பாளர்கள், தயா ரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கி யுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பெட்டியில் குறிப்பிட வேண்டும். பட் டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல்க்கு அதிகமாக ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற் பனை செய்யவோ அல்லது பயன்ப டுத்தவோ கூடாது. அதேபோல் பொதுமக்களும், அனு மதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். தீபாவளி பண்டிகையை மக்கள் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப் பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறும் கொண்டாட கேட்டுக் கொள்ளப்படு கிறது என மாவட்ட ஆட்சியர் க.விஜ யகார்த்திகேயன் கூறியுள்ளார்.