திருப்பூர், ஆக.11– மோடி அரசு கொண்டு வர முனை யும் புதிய கல்விக் கொள்கையால் சமூக நீதி கேள்விக்குள்ளாகும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருப்பூர் அம்மன் கலை யரங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை நிராகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள கல்விக் கொள்கையில் பல ஷரத்து கள் ஏற்கெனவே அரசு உத்தரவு மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது. சில அம்சங்கள் சட்டமாக்க முயற்சிகள் நடக்கின்றன. அத்துடன் சட்டமாக்கப் பட்ட பின் நிதி ஒதுக்குவதற்கு பதிலாக இப்போதே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி முதல் பல்கலைக் கழக கல்வி, ஆராய்ச்சி வரை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இதனால் சமூகநீதி கேள்விக்குள்ளா கும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மத்திய அதிகாரத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அனைவருக்கும் கல்வி, வேலை என்பதை எட்டுவதாக இல்லை. நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஏற்றதாக இல்லை. மக்கள் கருத்துக் கேட்புக்கு கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆக்கப்பூர்வ கருத்துகள் ஏற்கப்படு வதில்லை என்ற நிலையில் இந்த கல்விக் கொள்கையை அறிவியல் இயக்க மாநில மாநாடு நிராகரிக்கிறது. அத்து டன் அறிக்கையின் பாதகங்களை மக்க ளிடம் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு 370 மற்றும் 35ஏ அரச மைப்புசிறப்பு பிரிவை நீக்கியது சரி யான நடவடிக்கை அல்ல, அம்மாநில மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநிலத் தலைவராக முனைவர் தின கரன், மாநிலப் பொதுச் செயலாளராக எஸ்.சுப்பிரமணியும், மாநிலப் பொருளா ளராக ஆர்.ஜீவானந்தமும் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் மாநிலத் துணைத் தலை வர்களாக டாக்டர் சுகுமாரன், உதயன், மகபுனிஷா, பேராசிரியர் மலைச் செல்வி, ஜினோபாய், தனஞ்செய் ஆகிய ஆறு பேரும், மாநிலச் செயலா ளர்களாக பரமசிவம், சுந்தர், சேது ராமன், ராமமூர்த்தி, பாண்டியம்மாள், முத்துலட்சுமி, மு.தியாகராஜன், ஸ்டீபன்நாதன், பாலகிருஷ்ணன், நாரா யணன் ஆகிய பத்து பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் பிரதிநிதிகள் 291 பேரும், பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், விஞ்ஞானிகள், விருந்தினர் உள்பட 68 பேர் பங்கேற்ற னர்.
பேரா.ஆத்ரேயா
பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா இம்மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். அப்போது அறிவியல் இயக்கம் சமூகநலன், மக்கள் நலன் காக்க அறிவியல் கண்ணோட்டத்தில் நின்று பாடுபடும் இயக்கம். தற்போ தைய சூழலில் சாதி, மதம், பொருளா தார அடிப்படையில் பகைமையும், கடும் போட்டியும் நிலவுவது பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த சூழலில் மிகப் பெரும், தொடர்ச்சியான போராட்டத்தை இந்த இயக்கம் மேற்கொள்ள வேண்டும். கற்போம், கற்பிப்போம் என்ற அடிப்படை முழக்கத்துடன் அறிவியல் இயக்கம் 1990களில் மக்களிடம் சென்று கற்றுக் கொண்டது. அதுதான் இந்த இயக்கத்தைப் பாதுகாப்பானதாகவும், முன்னேற்றகரமானதாகவும் மாற்றியது. எனவே மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, அவர்களுக்குக் கற்பிக்கும் பாரம்பரியத்தை நாம் இழந்துவிடாமல் முன்னேறுவோம் என்று கூறினார். மாநாட்டு நிறைவாக அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் வி.ராம மூர்த்தி நன்றி உரையாற்றினார்.