தமிழகம் முழுவதும் சனியன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.