உடுமலை, டிச. 24- ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பொருட்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங் களாக நடைபெறவுள்ளது. மாவட்டத் திலுள்ள 13 ஒன்றியங்களில் இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு 7ஒன்றியங் ்களிலும், இரண்டாவது கட்டமாக 6 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக டிச.30ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சி களில், 254 ஓட்டுச்சாவடிகளும், குடி மங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கு 126 ஓட்டுச்சாவடி கள், மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் 80 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சி தலைவர்கள், 333 வார்டு உறுப்பினர் பதவிகள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சி தலைவர்கள், 201 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகள், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊராட்சி தலைவர்கள், 105வார்டு உறுப்பினர்கள், 9 ஒன்றிய கவுன் சிலர்கள், 1 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஓட்டுச்சாவடிகளில் வேட்பாளர்களின் விபரங்களோடு, வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை தகவல்களுடன் கூடிய சுவரொட்டிகளை பணியாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். வேட்பாளர்களின் சின்னங்கள், முகவரி எழுதப்பட்டு ஓட்டுச்சாவடிக ளில் ஒட்டப்படுகிறது. படிவம் 11,12,13,18,21,22,23 போன்ற படிவங்கள், தேர்தல் விபரக்குறிப் பேடு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான 80வகையான பெருட் களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தீவிர மாக நடைபெற்று வருகிறது.