tamilnadu

கொரோனா தாக்குதலுக்கு பிராய்லர் கோழிதான் காரணம் என்பது தவறான வதந்தி அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி

திருப்பூர், மார்ச் 9- திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல்வர் தலைமை யில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற் கான விழா மேடை கால்கோள் நிகழ்ச்சி ஞாயிறன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற் றது. இந்த விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 14.80 ஏக்கர் பரப்பள வில் சுமார் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.  உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி யுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு  கறிக்கோழி தான் காரணம் என்பது தவறானது என்றார்.