tamilnadu

ஆர்.எஸ்.பாரதிக்கு செய்தியாளர்கள் கண்டனம்

திருப்பூர், பிப். 18 - சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஊடகத்தினர் பற்றியும், ஊடக நிறுவனங்களைப் பற்றியும் மிக வன்மையான முறையில் பேசியுள்ளார். கருத்துரிமையை கேலிக்கூத்தாகும் ஆர்.எஸ்.பாரதியின் இச்செயலை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. மிகப்பெரிய கட்சியின் மிக முக்கிய பதவி வகிக்கும் தலைவர்களின் பேச்சு இனி எந்த ஒரு நபருக்கும் முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி, அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப் பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண் டுள்ளது.

;