tamilnadu

img

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கிடுக மத்திய அரசைக் கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 8- மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங் காத மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திங்களன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மருத்துவப் படிப்புகளுக்கான  மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக் கீடு வழங்காத மத்திய அரசை கண்டித் தும், தனியார் துறையில் பட்டியல் இனத்தவ ருக்கு இடஒதுக்கீடு வழங்கிட கோரியும், தமிழகத்தில் உள்ள தலித் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா ளர் அ. தமிழ்வேந்தன் தலைமையில் அக்கட் சியினர் திரளாக பங்கேற்றனர்.

சேலம்

இதேபோல், சேலம் மாவட்டத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாநகரச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், மண்டலச் செயலாளர்  நாவரசன், நிர்வாகி கள்  காஜாமைதீன்,  இமயவரம்பன் உள் ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

;