tamilnadu

img

இந்து முன்னணியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கைது

திருப்பூர், செப். 12 - திருப்பூரில் இந்து முன்னணி வன்முறை யைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட் டம் நடத்திய மக்கள் பாதுகாப்பு கூட்டமைப் பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். வணிகர்களை மிரட்டி வசூலில் ஈடுபட்ட துடன், தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு திருப்பூர் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று இந்த ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலா ளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் இல.அங்ககுமார், சண்.முத்துக்கு மார், திராவிடர் கழத்தின் யாழ். ஆறுச்சாமி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அகிலன், மே 17 இயக்கத்தின் சுந்தரமூர்த்தி மற்றும் தமுமுக, எஸ்டிபிஐ, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிக்கர இளைஞர் முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வா கிகள் பங்கேற்றனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் இந்து முன்னணி புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்ச னையை தற்காலிகமாக ஒத்திப்போடும் வகையில் 4 பேரை மட்டும் கைது செய்துள் ளனர். ஆகவே இதில் தொடர்புடைய அனை வரின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை மேம்போக்காக கையாள்வதை கண்டிக்கிறோம் என்ற னர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.