tamilnadu

img

முருகம்பாளையத்தில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு - ஏழாவது முறையாக மக்கள் போராட்டம்

திருப்பூர், அக். 30 - திருப்பூர் மாகராட்சி முருகம்பாளை யத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைப் பதற்கு ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், ஏழாவது முறை யாக வியாழனன்று இப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், முருகம்பாளையம் கோடீஸ் வரா லேப் எனும் டையிங் ஆலை அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேர்வு செய்துள்ளது. இத்தகவல் அறிந்து அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த னர். அனைத்துக் கட்சிகள், ஊர் நலச் சங்கம், ஊர் கோயில் கமிட்டி மற்றும் போராட்டக் குழு அமைத்து ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட னர். அத்துடன் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடமும் இந்த மக்கள் மனு அளித்தனர். எனினும், இங்கு மதுபானக் கடையை அகற்றுவது பற்றி மாவட்ட நிர்வாகம் எந்த உத்தரவாதமும் தரவில்லை.

அதேசமயம் இந்த மதுபானக் கடைக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டதாக 15 பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சிக்கு அஞ்சாமல் இப்பகுதி மக்கள் போராட் டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந் நிலையில், வியாழனன்று ஏழாவது முறை யாக முருகம்பாளையத்தில் டாஸ்மாக் எதிர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் ஏராளமான பெண்கள் உட் பட இருநூறுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக் கம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தை ஆதரித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரா உரை யாற்றினார்.

முன்னாள் மாவட்டத் தலை வர் இ.அங்குலட்சுமி உள்பட மாதர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டாஸ்மாக் அலுவர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மூன்று நாட்கள் கழித்து திங்கள்கிழமை உரிய முடிவு செய்வதாக வும், இங்கு கடை அமைக்காமல் அகற்றுவத ற்கு உரிய ஏற்பாடு செய்வதாகவும் பொது மக்களிடம் உறுதியளித்தனர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று முருகம்பாளையம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.