திருப்பூர், ஆக. 4 - வேலைவாய்ப்பு, வருமானம் இழக்கும் தொழிலாளர்களைக் காப் பாற்ற அண்டை மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் தொழி லாளர்களுக்கு இ - பாஸ் நடைமுறை யைத் தளர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் செவ்வாயன்று தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்புப் பணி கள் காரணமாக ஒரளவு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தற் போது தொழிற்சாலைகள் இயங்க, முழுமையாக தளர்வுகள் அளித் துள்ள நிலையில், திருப்பூரைச் சுற் றிய அண்டை மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பல்லாயி ரக்கணக்கில் வந்து செல்லும் நிலை யில், அவர்களுக்கு உரிய இ-பாஸ் வழங்கப்படுவதில்லை.
கணிசமான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பச் சென் றுள்ள நிலையில், மாவட்ட எல் லைக்கு அருகில் உள்ள இதர மாவட் டத் தொழிலாளர்கள் வருவதில் கடும் நெருக்கடி உள்ளது. எனவே தொழிலாளர்கள் வந்து செல்வதில் அவர்கள் பணிபுரியும் நிறுவன அடையாள அட்டையைக் காண்பித் தால் போதும் என்ற முறையில், இ-பாஸ் நடைமுறையைத் தளர்த்த வேண்டும்.
அவசரத் தேவைகளுக்காக வாடகை மற்றும் சொந்த கார், வேன் வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். முழுமையான கொரோனா பரி சீலனை செய்து உடனுக்குடன் முடி வுகளை தெரிவித்து தொழிலில் பணி யாற்ற உரிய அனுமதியை வழங்க வேண்டும். எனவே இவர்கள் வாக னங்களை இயக்க இ பாஸ் தளர்வு செய்து உரிய அனுமதியை வழங்க வேண்டும்.
தற்போது திருமணங்கள், இறப்பு, மருத்துவக் காரணங்களுக் காக அனுமதி வழங்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில் பெரும் பகுதி கோரிக்கைகள், விண்ணப்பங் கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு வரு கிறது. குறிப்பாக சென்னை, தென் மாவட்டங்களில் இருந்து திருப்பூ ருக்கு வ
ரும் மக்களில் கொரோனா பரிசோதனையில், நோய்த்தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றித ழோடு உரிய சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பித்தாலும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படுவ தில்லை. தற்போது பள்ளிகளில், கல் லூரிகளில் சேருவதற்கு கல்வி நிறு வனங்களில் மாற்றுச் சான்றிதழ் வாங்கச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இ-பாஸ் நடைமுறையில் உரிய தளர்வுகள் வழங்கி பதற்றமும், பாதிப்பும், அச்சமும் ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்ற நிலையால், சனிக்கி ழமைகளில் அதிகப்படியான மக்கள் கடைகளில் குவியும் நிலையில், நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாற வாய்ப்புள்ளது.
எனவே ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதை தளர்த்துவது திருப்பூர் போன்ற அதிக அடர்த்தியான மக்கள் தொகை உள்ள மாநகரத்தில் நிலைமையைச் சீர் செய்யவும், மக்க ளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வும் உதவி செய்திடும். எனவே திருப் பூரின் விசேஷ நிலைமையைக் கருத் தில் கொண்டு இத்தகைய இ-பாஸ் தளர்வுகளை வழங்கிட தமிழக முதல் வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, செ.முத்துக்கண் ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.