tamilnadu

img

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

உடுமலை, நவ.3- சாலையோர வியாபாரிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாத்திடக்கோரி செவ் வாயன்று சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி யிலுள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதரத்தை பாதுகாத்திடவும், சாலை யோர வியாபார ஒழுங்குமுறைச் சட்டம் 2014-ஐ அமல்படுத்த வேண்டும். உடுமலை முழுவதும் சாலையோர வியாபாரம் செய் யும் தொழிலாளர்களை முறையாக கணக் கெடுத்து உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய இடம்  ஒதுக்கி வாழ்வாதாரத்தை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நக ராட்சி அலுவலகம்  முன்பு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகி பாபு தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் கவுன்சிலர் பாலதண்டபாணி, போக்குவ ரத்து சங்கத்தின் விஸ்வநாதன், மோட்டார் சங்கத்தின் சுதா சுப்பிரமணியம், கட்டுமான சங்கத்தின் கி.கனகராஜ், வெ.ரங்கநாதன்,  பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சித் திக் அலி, சாஜிக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.