பல்லடம், மே 3-பல்லடத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனியன்று (மே 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, மாணிக்காபுரம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.